சீனாவில் 17லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்!

0
900

சீனாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஜீரோ கோவிட் திட்டம் நீக்கப்பட்டால் 17 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என ஷாங்காய் புடான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி பல லட்சம் பேரை காவு வாங்கிடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறைவான தடுப்பூசி எண்ணிக்கை, மிக குறைந்த செயல்திறன் கொண்ட தடுப்பூசி மருந்து உள்ளிட்டவை ஒமிக்ரானை எதிர்கொள்ளாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சீனாவில் நடத்தப்பட்டும் கொரோனா பரிசோதனை முறைகள், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் இன்றி ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை மே முதல் ஜூலையிலான கொரோனா அலையில் மட்டும் 11.22 கோடியாக அதிகரிக்கும். இவர்களில் சுமார் 51 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் ஷாங்காய் நேற்று மட்டும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை 1,487 ஆக பதிவாகி இருக்கிறது. பீஜிங்கில் கொரோனா பரவல் எண்ணிக்கை திங்கள் கிழமை அன்று 74 ஆக இருந்தது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 37 ஆக குறைந்து இருக்கிறது.

முன்னதாக உலக சுகாதார மையம் சீனாவில் ஜீரோ கோவிட் திட்டத்தை நீக்குவது பற்றி பரிசீலனை செய்ய வலியுறுத்தி இருந்தது. சீனாவின் ஜீரோ கோவிட் திட்டம் மாவட்ட எல்லைகளை மூடுவது, கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் அனைவருக்கும் தொடர் கொரோனா பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

இது போன்ற கடுமையான விதிகளால் சீனாவின் பெரும்பாலான பகுதிகள் உலகை விட்டே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

இத்தகைய மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதனால் இந்த ஆண்டிற்கான பொருளாதார இலக்குகளை சீனா எட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது.