யாழ் மாவட்டத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறவில்லை!

0
677

யாழ்ப்பாணத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என வடக்கு பொலிஸ் மா அதிபரின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுபூராகவும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மற்றும் அரசதரப்பு ஆதரவாளர்களின் வீடுகள் வாகனங்கள் எரியூட்டப்பட்ட தோடு தாக்கப்பட்ட நிலையில் நாடு பூராகவும் அரசு ஆதரவாளர்களின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசிற்கு ஆதரவளித்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் அங்கயன் இராமநாதனின் அலுவலகம் மற்றும் பொது ஜன பெரமுனவின் இரண்டு அலுவலகங்கள் உள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் எந்தவித போராட்டங்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது