“பொதுமக்கள் அமைதி காக்க” மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்!

0
652

இலங்கையில் இல் உணர்ச்சிமயமான நிலைமை அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், வன்முறை செயல்பாடுகள் அந்த வன்முறையை மேலும் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தேவை ஒரு பொருளாதார தீர்வு மட்டுமே. அதற்கு இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல் – வீதிகளில் போலீஸ், ராணுவம் குவிப்பு
இலங்கையில் மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.