உக்ரைன் பாடசாலை மீது ரஷ்யா கொடூர தாக்குதல்!

0
726

உக்ரைனில் பாடசாலை மீது நடந்த வெடிகுண்டுகள் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் இந்த போரில் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.  

ரஷ்யாவின் தாக்குதலால் அந்த நாட்டின் பல நகரங்களில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள் குண்டுவீச்சுகளால் சேதமடைந்து உள்ளன.

இதேவேளை குறித்த போரானது நீண்ட காலத்திற்கு தொடரும் என கூறப்படுகிறது.

இதனால், சொந்த நாட்டிலேயே உக்ரைனியர்கள் அகதிகளாக வாழ கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த போரில் கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ் பகுதியில் பிலோகோரிவ்கா கிராமத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதில் அந்த பாடசாலை முற்றிலும் சேதமடைந்தது என லுகான்ஸ்க் கவர்னர் செர்கீ கைடாய் கூறியுள்ளார். 

வெடிகுண்டுகள் வீசப்பட்டபோது, அந்த பாடசாலையில் மொத்தம் 90 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 27 பேர் காப்பாற்றப்பட்டு விட்டனர். பள்ளியில் இருந்த 60 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.