யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்!

0
995

யாழ். தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி வாளால் வெட்டிய நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப் பயங்கர சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை வித்தக பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,

தனிமையில் வசித்து வந்த மூதாட்டியிடம் கொள்ளை இடுவதற்காக மூவர் கொண்ட குழு வீட்டுக்குள் நுழைந்தள்ளது.

இதன்போது கொள்ளையர்கள் அவதானித்த மூதாட்டி சத்தமிட்ட போது, கொள்ளையர்கள் வாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.