காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட கோட்டாபயவின் பாதுகாப்பு படையின் அதிகாரம்!!

0
891

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்ததையடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அரச தலைவர் பாதுகாப்பு படையின் அதிகாரம் நேற்று முதல் மீண்டும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதற்கமைய, புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல் மா அதிபர் நிமல் பெரேரா நேற்று முதல் அரச தலைவர் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தலைவரின் பாதுகாப்பிற்காக நுகேகொடையில் நிறுவப்பட்ட புலனாய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பிரதானியான காவல் அத்தியட்சகர் JBT.ஜயலத் அரச தலைவர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை மற்றும் சிவில் விவகாரங்களில் இராணுவம் தலையிட முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை சுமார் 400 காவல்துறையினரையும், பெருமளவிலான இராணுவத்தினரையும் உள்ளடக்கிய அரச தலைவர் பாதுகாப்பு பிரிவு இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரின் கட்டளையின் கீழ் செயற்பட்டுவந்துள்ளது.