நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகள் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 1998 ஆம் ஆண்டுமுதல் அரசியலில் அவர் கடந்துவந்த பாதைகள் எவ்வாறு அமைந்திருந்தன என பார்க்கலாம்.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் அரசியல் பயணம்
1998 – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ருவன்வெல்ல தொகுதி அமைப்பாளராக நியமனம்.
2000 – நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பம். கேகாலை மாவட்டத்தில் களமிறங்கி, 49,585 வாக்குகளுடன் வெற்றிநடை.
2001 – இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றிமகுடம் சூடி சபைக்கு தெரிவு.
2004 – பொதுத்தேர்தலில் 80, 236 வாக்குகளைப் பெற்று மீண்டும் சபைக்கு வருகை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சு பதவியும் வகிப்பு.
2007- நிதி மற்றும் அரச வருமான அமைச்சராக பதவியேற்பு.
2010 – பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் போட்டி, 146,623 விருப்பு வாக்குகளுடன் பெரு வெற்றி.
2015 – பொதுத்தேர்தலிலும் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கி வெற்றிநடை. மைத்திரி அணி உறுப்பினர் என்பதால், விருப்பு வாக்கு பட்டியலில் நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். (62,098 வாக்குகள்) தேசிய அரசு உதயமானதால், மைத்திரி – ரணில் ஆட்சியில் அமைச்சு பதவி வகிப்பு.
2020 – மொட்டு சின்னத்தில் போட்டி. 103,300 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவு.
2020 – பிரதி சபாநாயகராக ஏகமனதாக தெரிவு. 2022.04. 30 – பிரதி சபாநாயகர் பதவி துறப்பு.
2022. 05. 05. – பிரதி சபாநாயகருக்கான தேர்வில் வெற்றி. 148 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பு.
அதேவேளை 2000 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகித்து வருகின்றார்.
மேலும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கொழும்பு றோயல் கல்லூரி மாணவர். ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.