கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை

0
476

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வலுக்கட்டாயமாக இசுருபாய வளாகத்திற்குள் பிரவேசித்த போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பதற்றமான நிலைமை சூழ்நிலை ஏற்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று வீதித் தடைகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தமையே இதற்குக் காரணமாகும்.