தமிழ் உணர்வாளர் தலைவர் தொடர்ந்து விளக்கமறியல்!

0
625

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

இணைய தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் படங்களை பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3 ஆம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கது செய்யப்பட்டிருந்தார்.

கணபதிப்பிள்ளை மோகன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Gallery

கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனோ காரணமாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாமல் காணொளி மூலம் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் இன்று எடுக்கப்பட்டது. இதன்போது சுமார் ஒருவருடத்துக்கு பின்னார் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.