நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு சீனா முழுமையான ஆதரவை தருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மீண்டும் வலியுறுத்தினார்.
நிதி மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரியுடனான (Ali Sabry) சந்திப்பின் போது(02-05-2022) குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரராக, இலங்கையின் சிரமங்களை சாதகமாக பரிசீலித்து, கூடிய விரைவில் சரியான உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா ஒரு செயலில் பங்கு வகிக்க தயாராக உள்ளதாக குய் ஜென்ஹாங் மேலும் தெரிவித்துள்ளார்.