காலிமுகத்திடல் முன்னெடுக்கப்படும் “கோட்டா கோகம” வுக்கு அருகில், கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துறைமுக நகர் நுழைவாயிலுக்கு முன்பாகவே, கலகம் தடுக்கும் பொலிஸார் இவ்வாறு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து காலி முகதிடலில் அரசாங்கத்தை வீடு செல்லுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.