கோட்டபாயவுக்கு மேலும் நெருக்கடி!

0
697

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர் ஒருவரை தலைமைப் பொறுப்பை ஏற்க அழைக்கவுள்ளதாக அந்த குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய கட்சித் தலைவரின் பெயர் இப்போது வெளியிடப்படாது என்று பேச்சாளர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, புதிய இடதுசாரி முன்னணி மற்றும் ஏனைய கட்சிகள் புதிய அரசியல் கட்சியில் இணைந்து அங்கத்துவம் பெற இணங்கியுள்ளன.

இந்த தீர்மானம் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.