சமகால அரசாங்கத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கலைஞர்கள் புதிய வடிவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ராஜபக்சர்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் பல்வேறு வேடங்களில் மக்கள் மத்தியில் ஊர்வலமாக சென்று எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
மேதினமான இன்று நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றனர்.
அதேவேளை காலிமுகத்திடலிலும், அலரி மாளிகைக்கும் முன்னாளும் பொது மக்கள் முகாமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.