மண்னெண்ணெய் வழங்கவில்லை; எரிபொருள் நிலையம் மீது தாக்குதல்

0
396

நீர்கொழும்பு தளுபத்த எரிபொருள் நிரப்பு நிலையம் மீது பொதுமக்களால் தாக்குதல் நடத்தப்பட்டனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக நேற்று பகல் 2 மணியிலிருந்து மக்கள் காத்திருந்தனர். எனினும், மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டதென உரிமையாளர் கூறியதன் காரணமாக ஆத்திரமடைந்து மக்கள், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் எரிபொருள் நிரப்பு நிலைய அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டடதுடன் பூச்சாடிகள் பலவும் உடைக்கப்பட்டன.

மின்சாரத்தடை காரணமாக இரண்டு தடவைகள் மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டு பின்னர் இரண்டாவது தடவை மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதன் பின்னர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எரிபொருள் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, நீர்கொழும்பு பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.