பிரான்ஸின் லாச்சப்பல் நகரிற்கு சென்ற யாழ்.மாநகர முதல்வர்

0
556

பிரான்ஸில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் ‘பரிஸ் லாச்சப்பல்’ பகுதியில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்ற்க்கும் இடையில் வர்த்தகர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பான ஒரு நீண்ட நேரக் கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்கள்,

யாழ்.மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகளையும் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களின் செயற்பாடுகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

லாச்சப்பல் என்பது குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுகின்ற நிலையில் யாழ்.மாநகர முதல்வரை இங்கு வரவழைத்து மதிப்பளிப்பதனை பிரானஸ் வாழ் தமிழ்வர்த்தகர்கள் பெருமை கொள்ளுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் எங்களுடைய பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்ற கனவுடன் தான் நாங்கள் இங்கு பல இன்னல்களை சந்திக்கொண்டு பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தாயகத்து மக்களது கல்வி சுயதொழில் வாழ்வாதார மேம்பாடு தொழில் முயற்சி மற்றும் அவர்களின் தனித்துவ அடையாளங்களைப் பேணுவதற்கு தம்மால் ஆன உதவிகளை மேற்கொண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகளில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்த பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்கள் யாழ்.மாநகரத்தில் ஒரு பெரிய முக்கியமான செயற்றிட்டம் ஒன்றிணை தாங்கள் அனைவரும் இணைந்து செயற்படுத்தி தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.