பிரான்ஸ் ஜனாதிபதி மீது இடம்பெற்ற தக்காளி தாக்குதல்!

0
624

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மீது தக்காளி தாக்குதல் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை காலை செர்ஜி நகருக்கு விஜயம் செய்தார், அங்கு அவர் உள்ளூர் மக்களை சந்தித்தார். பின்னர் அங்குள்ள சந்தை ஒன்றை பார்வையிட்டார். சந்தையில் வியாபாரிகளை சந்தித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒருவர் தக்காளியை மக்ரோன் மீது வீசினார். ஆனால் அதிலிருந்து ஜனாதிபதி குடையால் பாதுகாக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு, மக்ரோன் தனது சந்திப்பைத் தொடர்ந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் மக்ரோனின் முதல் பயணம் இதுவாகும்.