நேரடியாக முடிவெடுத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்!

0
341

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அரச தலைவரை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்களே, அப்போது பிரதமரும் வீட்டுக்குப் போக வேண்டுமா? “இது இன்று வந்தவை அல்ல, ஜே.ஆரை கொன்று விடுவோம் என்று பலகையை அடித்தார்கள்.

இதற்கு குழப்பமடையாமல் அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்.

தலை வலி இருப்பவருக்கு உடம்பு வலிக்கு மருந்து கொடுத்து சரிவராது. “அரச தலைவராகலாம், பிரதமராகலாம், எதிர்க்கட்சித் தலைவராகலாம்.

நேரடியாக முடிவெடுக்க வேண்டும்.நேரடியாக முடிவெடுத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

அந்த பிரச்சினைகளை மூடி மறைப்பதில் எவ்வித பயனும் இல்லை.

மேலும் நோய்க்கு தேவையான சிகிச்சையை அளிப்பதை விடுத்து வேறு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை.என்றார்