பெற்ற மகளை தந்தையே திருமணம் செய்தாரா? பரபரப்பை ஏற்படுத்திய திருமண புகைப்படம்!

0
530

தந்தை ஒருவர் தனது மகளை திருமண திருமணம் செய்து கொண்டதாக வெளியாகி வரும் தகவல் போலியானது.

வயதான ஒருவர் இளம் பெண் நெற்றியில் குங்குமம் வைக்கும் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டதற்காக வழங்கப்பட்ட சான்றிதழின் புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

சான்றிதழின் படி குறிப்பிட்ட திருமணம் குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் மணமகன் பெயர் சாடோதரா தினேஷ் குமார் என்றம், மணமகள் பெயர் ஸாபாடியா சீத்தால்பென் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதிலேயே தந்தையின் பெயர் ஸாபாடியா தஸ்ரத்பாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலமே இவர்கள் இவரும் தந்தை மகள் அல்ல என தெளிவாக தெரிகிறது. இவர்கள் திருமணம் கடந்த ஏப்4ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்த போது இவர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியை சார்ந்தவர்களாம்.

இவர்கள் இருவரும் 18 வயதை கடந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணம் செல்லும் என்றும் அதனாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதனால் தந்தையும் மகளும் திருமணம் செய்தார்கள் என சமூகவலைத்தளங்களில் பரவும் செய்தி போலியானது.