ஐபிஎல் 2022: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி

0
747

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 88 ரன்கள் அடித்தார். சென்னை அணி பந்து வீச்சாளர்களில் பிராவோ 2 விக்கெட்டையும், மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து தொவியடைந்த்து. சென்னை அணியில் அம்பாடிராயுடு அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களில் ரபாடா, ரிஷி தவான் இருவரும் தலா 2 விக்கெட்களையும், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் 8புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 6-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பெங்களுரூ -ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.