கொரோனா அச்சம்; அத்தியாவசிய பொருட்களை போட்டி போட்டு வாங்கும் சீனர்கள்!

0
596

சீனாவின் வுகானில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது உலகை பெரும் அழிவுக்கு இட்டுச்சென்ற நிலையில் , இன்றைக்கு அதே சீனா கொரோனாவின் திரிபான ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களின் அலையில் சிக்கி உள்ளது.

இந்நிலையில் சீனாவின் பொருளாதார தலைநகர் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில்தான் அறிகுறியற்ற கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 51-பேர் பலியாகி உள்ள நிலையில் நகரம் கொரோனா தொற்றின் மையமாக உள்ளது.

பீஜிங் நகரில் 10 நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவியதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் பெய்ஜிங் மத்திய பகுதியான ஷயோங் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனையை சீனா நடத்தி வருகிறது.

இதற்காக வணிக வளாகங்கள், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்களின் மாதிரிகளை அளித்து வருகின்றனர்.

இந்த பரிசோதனையில் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாலும் ஷாங்காய் நகரில் அமல்படுத்தப்பட்டதைப் போல மிகக் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் அங்குள்ல மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனையடுத்து 35 லட்சம் பேர் வசிக்கும் ஷயோங் மாவட்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சூப்பர் மார்க்கெட்டுகள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கின்றனர்.