போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட்!

0
523

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்களால் தாம் ஈர்க்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் ( Holger Seubert) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

  “இலங்கையின் மதிப்புமிக்க மக்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வளவு அமைதியான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நான் ஈர்க்கப்பட்டேன்,” என பதிவிட்டுள்ளாார். அதோடு , 1989 இல் ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்ததை அது நினைவுபடுத்துகிறது என தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வலிமை பெற வாழ்த்துவதாகவும் அவர்  (  Holger Seubert) தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.