கொழும்பு -பொரள்ளை லேடி றிட்ஜ்வே மருத்துவமனையில் கடும் மருந்துப் பற்றாக்குறை நிலவும் அதே வேளை, சில மருந்துகள் அறவே இல்லையென்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆகவே, இந்த இணைப்பில் காணப்படும் மருந்துப் பொருட்களை மருத்துவமனைக்கு அன்பளிப்பாகப் பெற்றுக் கொடுக்கக்கூடிய யாருமிருந்தால் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றனர்.
மருத்துவமனையில் தற்போதைக்கு நூற்றுக்கணக்கான அப்பாவிச்சிறார்கள் சிகிக்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் அன்பளிப்பாக வழங்கும் ஒவ்வொரு மாத்திரையும் ஒரு குழந்தையின் உயிர்காக்க உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
தென்கிழக்காசியாவின் மிகப்பெரும் சிறுவர் மருத்துவமனையாக புகழ்பெற்ற மருத்துவமனையின் இன்றைய நிலை இது.