அவசர உதவிகளின் போது கறுப்பின மற்றும் வெள்ளை இன மக்களுக்குச் சமமான கவனம் செலுத்தப்படுவதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட உதவியின் ஒரு பகுதியே உலகின் ஏனைய இடங்களின் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழங்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அத்தனோம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதையும் பாதிக்கிறது என்பதால் உக்ரைனுக்கு உதவுவது முக்கியமானது என்றார்.