மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று விசேட பூஜைகள்

0
492

ன்னார் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் புதுவருட பிறப்பை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெறுள்ளன. 

ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 8.41 மணிக்கு விசேட ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நாட்டின் அரசும், மக்களும் சிறக்க விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டதோடு, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டு கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.