லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

0
622

அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக எரிவாயுத் தொகை இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்கீழ் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 18-ம் திகதி முதல் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.