காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த 5 நாட்களாக இளைஞர், யுவதிகளினால் இரவு பகல் பாராது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.