கஞ்சாவுடன் கைதான இருவர் சரீர பிணையில் விடுவிப்பு

0
441

கஞ்சாவுடன் கைதான இருவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது தலா 50,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் மேற்கு பகுதியில் 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2100 மில்லிகிராம் கஞ்சாவுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கோட்டையடி – பருத்தியடைப்பு பகுதியில் 48 வயதான சந்தேகநபர் ஒருவர் தொள்ளாயிரம் மில்லிகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவர்கள் இருவரையும் ரூபா 50,000 பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.