உயிருக்கு பயந்து வெளியேறும் மக்கள்! உக்ரைன் மீது தீவிர தாக்குதல் தாக்குதல் நடத்த ரஷ்ய போர் வாகனங்கள் அணிவகுப்பு!

0
437

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் 47 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்த 13 கி.மீ. தொலைவுக்கு ரஷ்ய போர் வாகனங்கள் அணிவகுத்து செல்லும் செயற்கைகோள் படம் வெளியாகியுள்ளது. 

இதன் காரணமாக  உயிருக்கு பயந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறுகின்றனர்.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது.