அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கோட்டாபயவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி அரசிற்கு எதிரான வசனங்கள் தாங்கிய பதாகைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கள் தாய் நாட்டின் சமாதானத்திற்க்காகவும் எங்கள் மக்களின் சுகந்திரத்திற்காகவுமே நாங்கள் அனைவரும் இங்கே ஒன்றுகூடி உள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.