விடுதலைப்புலிகளுக்கு ரொக்கெட்டுக்களை வழங்கிய வெளிநாட்டு பாதாள உலகத் தலைவர் கைது

0
470

ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருடன் சேர்த்து மூன்று தாய்லாந்து நபர்களையும் கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பேரும் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தனர் என்பதை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் விளக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கைது செய்யப்பட்ட ஜப்பானிய பாதாள உலகத் தலைவர், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஏவுகணைகளை வழங்க முயற்சித்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்கக்கூடிய ஏவுகணைகளை இவர்கள் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மூவரும் நியூயோர்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள், ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.