விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

0
379

வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் அவர்களிடம் இருந்து 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் ரூ. 23,820 பறிமுதல் செய்யப்பட்டது. மருதமுனையிலிருந்து காத்தான்குடிக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த போதே கேரள கஞ்சா மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலதாப்பிட்டி இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், கடற்கரை வீதி, பெரிய நீலாவணை, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் கல்முனைப் பொலிஸாரிடம் சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.