மருந்து பொருட்களுக்கான விலை அதிகரிப்பு! தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிவிப்பு

0
261

வர்த்தமானியில் அறிவிக்கப்படாத சில மருந்துப் பொருட்களுக்கு 20 சதவீதம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விலை அதிகரிப்பு நேற்று (08) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளது.