நெருக்கடியில் திணறும் சிறிலங்கா! ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

0
576

சிறிலங்காவின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவான விவாதங்களை ஆரம்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ,ருமேனியா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளிவர ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளை ஆராயுமாறு அனைத்து தரப்பினரையும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.