அடுத்த சில நாட்களில் தொடரும் மழைக்காலம்!வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0
378

இலங்கையின் கிழக்கில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த வளிமண்டல நிலையின் வளர்ச்சி காரணமாக தற்போதுள்ள மழைக்காலம் அடுத்த சில நாட்களில் (9 மற்றும் 10 ஆம் திகதிகளில்) தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில், சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிதமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழையின் போது அவ்வப்போது பலத்த காற்று வீசும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.