கோட்டாபயவை ஆதரித்தமைக்கு மன்னியுங்கள்! – திஸ்ஸ ஜனநாயக்க

0
349

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக முன்னணி ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க மன்னிப்புக் கோரியுள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாட்டின் குடிமக்களிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். இந்த அரசாங்கத்தை ஆதரித்தமைக்காக நான் ஏமாற்றப்பட்டுள்ளேன. ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கையின் பேரில் தானும் பலருடன் இணைந்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததாக திஸ்ஸ ஜனநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னோக்கிச் செல்லும்போது எந்தவொரு தனிநபருக்கும் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் நடுநிலைமையுடன் இருப்பேன் என்றும் ஜனநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.