இலங்கையில் தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருவதால் டொலரின் மதிப்பு உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று (5) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலை தீவிரமான பொருளாதார சீரழிவுக்கான அறிகுறியாகும் என துறைசார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.