அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள்!

0
282

கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம்,மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

அத்தோடு, தலைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.