நாளை தினம் மின்வெட்டு தொடர்பாக வெளியான தகவல்!

0
304

இலங்கையில் நாளை தினம் (5) மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (pucsl) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆறு மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

A தொடக்கம் L வரையான வலயங்களிற்குட்பட்ட பகுதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

P தொடக்கம் W வரையான வலயங்களிற்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை 4 மணித்தியாலங்களும், மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.