அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டபாய

0
423

அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று  உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.

அமைச்சர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

நேற்றிரவு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். 

நாட்டில் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருந்தனர். 

இதன்மூலம் அமைச்சரவை கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் உருவாகும் நிலை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனினும் சமகால பிரதமர் பதவி விலகாமல் அமைச்சரவை கலைக்க முடியாது என அரசியலமைப்பின் 49ஆவது சரத்து வெளிப்படுத்துவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.