லக்னோ அணிக்கு எதிராக களமிறங்கும் CSK அணி! CSK அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்…

0
886

ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அணி தான் விளையாடிய முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் உதை வாங்கியது. இதையடுத்து இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் அணி களமிறங்குகிறது.

இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

அதன்படி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் அசத்திய ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி இவரை வாங்கியது.

அதேபோல் விசா பிரச்சனை முடிந்து மொயின் அலி சமீபத்தில் சென்னை அணியில் இணைந்துள்ளார்.

அதனால் இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.