நாடு முழுவதுவும் சூடுபிடிக்கும் ஆர்ப்பாட்டங்கள்!

0
286

மின்சாரம், எரிபொருள், எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நாட்டின் பல பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆர்ப்பாட்டத்தின் காரணத்தால் நாட்டின் சில பகுதிகளில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.

நீண்ட நேர மின்சார துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு பிரச்சினை என்பன காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய காலி – கொழும்பு பிரதான வீதியின் பலப்பிட்டிய பகுதியில் வீதியை மறித்து இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி குறித்த பகுதி மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கண்டி, அம்பலாங்கொடை, உடவளவ, ஹொரணை, கொள்ளுபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.