மட்டக்களப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் 4 பேரைக் கைது!

0
377

மட்டக்களப்பு – பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் ஹெரொயின் போதைப்பொருளுடன் 4 பேரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரொயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 50 மில்லிகிராம் ஹெரொயினும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.