பாக்கியலட்சுமி சீரியல் பிரபலத்தின் வீட்டில் கொண்டாட்டம்

0
307

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடுகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் சுசித்ரா அதான் நம்ம பாக்கியா.

சீரியலில் தற்போதைய கதை

ராதிகாவை வீடு மாற்றி தனது வீட்டார் நெருங்க கூடாது என செம பிளான் போட்டிருக்கிறார் கோபி.

தாத்தா தனது மகன்-மருமகள் புகைப்படத்தை ராதிகாவிடம் காட்டுவோம் உண்மை வெளியாகிவிடும் என அவர்களது போட்டோவுடன் ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

ஆனால் எதிர்ப்பாராத விதமாக ராதிகா வீட்டைகாலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என கணிக்க முடியவில்லை.

நேஹா வீட்டில் நடந்த கொண்டாட்டம்

இந்த பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற பெயரில் நடித்து வருபவர் நேஹா. இவரின் அம்மாவிற்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த சின்ன குழந்தைக்கு ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் முதல் வருட பிறந்தநாள் கொண்டாட்டத்தை போட்டுள்ளனர் குடும்பத்தினர். குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் எழில் என்கிற விஷாலும் கலந்து கொண்டிருக்கிறார்.