சிங்கப்பூரில் தமிழருக்கு உறுதியானது மரணதண்டனை

0
367

போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனை பெற்ற இந்திய வம்சாவளி நபரான தமிழ் இளைஞனின் மேல்முறையீட்டை சிங்கப்பூர் அரசு தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு 42.72 கிராம் போதைப்பொருளை கால்தொடையில் மறைத்து கடத்தியபோது பிடிபட்டார். விசாரணை முடிவில் போதைப்பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2010-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதித்தது 2011-ல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் 2019-ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கேயும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதபின் அரச தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். எனினும் அரச தலைவரும் கருணை மனுவை திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், மரண தண்டனைக்கு எதிராக சிங்கப்பூர் அரசிடம் முறையீடு செய்தார். ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தர்மலிங்கத்தின் மனுவை விசாரித்தது. அப்போது, தர்மலிங்கத்தின் முறையீடு எங்கள் அரசியலமைப்புக்கு எதிராக அப்பட்டமானது மற்றும் நீதிமன்ற துஷ்பிரயோகம்’’ எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தர்மலிங்கம் சார்பில் மரண தண்டனையை நிறுத்தி வைத்து மனநல குழுவை கொண்டு மதிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு மனு உண்மை மற்றும் சட்ட அடிப்படையில் இது தகுதியற்றது, அடிப்படையற்றது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவருக்கான மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.