16 வயதான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!சந்தேகத்தின் பேரில் 3 மாணவர்கள் கைது

0
332

16 வயதான மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழக்க காரணம் என்ற சந்தேகத்தின் பேரில் 3 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெல்மடுல்ல – கிரிந்திஎல்ல அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு சென்று திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மாணவரின் சடலம் நேற்றைய தினம் கிரிந்திஎல்ல அணைக்கட்டு பகுதியில்லிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சில மாணவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாணவர் நீரில் மூழ்கும் போது உடன் இருந்த ஏனைய மாணவர்கள் இந்த சம்பவம் பற்றி எவருக்கும் அறிவிக்காது வீடுகளுக்கு சென்றுவிட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று மாணவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.