இலங்கை தனியார் பேருந்து சங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

0
358

டீசல் பற்றாக்குறையால் பேருந்துத் தொழில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.

அத்துடன் டீசல் தட்டுப்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியார் பேருந்து சங்கங்கள் தவிர, பாடசாலை வேன், கொள்கலன் லொறிகள் என அனைத்து போக்குவரத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்துகளுக்கான எரிபொருளை டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கும் முறையை இலங்கை போக்குவரத்து சபை உருவாக்கியுள்ள போதிலும் தற்போது தனியார் பேருந்துகளுக்கான எரிபொருளை டிப்போ வழங்குவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.