அழிவின் விளம்புக்குள் சென்றுள்ள உக்ரைனின் மரியுபோல் நகர்!

0
364

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது என்றும், அந்த நகரில் சுமார் 1.60 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. ரஷ்ய துருப்புகளின் கொடூர தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் உருக்குலைந்து வருகின்றன.

குறிப்பாக துறைமுக நகரமான மரியுபோல் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. ரஷ்ய துருப்புகளின் தொடர் குண்டு வீச்சால் மரியுபோல் நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் எலும்புகூடுகளாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் மரியுபோல் நகரம் அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதாகவும், எனவே அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் எனவும், அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலவரப்படி மரியுபோல் நகரில் சுமார் 1,60,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பரிதவித்து வருவதாக அந்நகர மேயர் கூறினார்.

மரியுபோல் நகரில் உள்ள மக்களை வெளியேற்ற 26 பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ரஷ்ய துருப்புகள் சம்மதிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே மரியுபோல் நகரத்துக்கு இன்னும் எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை என்று மனிதாபிமான உதவிகளை வழங்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.