வெப்ப காலத்தில் சிறுவர்கள் செய்ய வேண்டியவை – விசேட வைத்திய நிபுணர் தகவல்!

0
461

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு அதிகம் காணப்படுகின்றது.

இதனை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.

குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால் வியர்வைக் கொப்புளங்கள் அதிகரிக்கலாம். அதனால் இருமல், சளி எதுவாக இருந்தாலும் குழந்தைகளைக் குளிக்க வைக்க வேண்டும்.

அத்துடன், குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.