மின்தடையின் போது பொலிஸ் நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ள உழவு இயந்திரம்!

0
434

முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் சான்றுப் பொருட்களாக ஒப்படைக்கப்பட்ட இரு உழவு இயந்திரம் நள்ளிரவு வேளையில் மின்தடையின் போது பொலிஸ் நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட பறங்கியாற்றில் கடந்த வெள்ளிக்கிழமை (25) பகல் 11 மணியளவில் சட்ட ரீதியற்ற முறையில் மணல் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களையும், அதன் சாரதிகளையும் நட்டாங்கண்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாலை 4 மணியளவில் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வழக்கு பதிவு செய்யும் வகையில் உழவு இயந்திரங்கள் இரண்டும் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்தன.

மேற்படி உழவு இயந்திரங்கள் இரண்டும் அன்றைய தினம் இரவு 11 மணியளவில் மின் தடை நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து மாயமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தெடர்பு கொண்டபோது தவறு ஒன்று இடம்பெற்றுள்ளது என்றும் பதிலளித்துள்ளார்.