துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் பலி

0
378

யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரை பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்ப தலைவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

சம்பவம்த்தில் கைதடி மேற்கைசேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொிவிக்கையில், 

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கைதடி – கோப்பாய் வீதியில் கைதடி கலைவாணி வித்தியாலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் இந்த விபத்தை எற்படுத்தியிருக்கின்றார்.

சம்பவத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.